For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? - உண்மை என்ன?

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கங்கை நதியின் கரையில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டதாக வீடியோ கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது
03:27 PM Mar 13, 2025 IST | Web Editor
பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா    உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘FACTLY

Advertisement

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26, 2025 அன்று மகா சிவராத்திரி நாளில் நிறைவடைந்தது ( இது தொடர்பான செய்திகள்  இங்கே  உள்ளது ). இதற்கிடையில், கங்கை நதியின் கரையில்ஒரு கண்கவர் வாணவேடிக்கையைக் காட்டும் ஒரு வீடியோ கிளிப் ( இங்கே , இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) ஒன்று வைரலாகி வருகிறது. அவை 2025 மகா கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்துள்ளனர். இந்தக் கட்டுரையில், இடுகையில் கூறப்பட்டுள்ள கூற்றை உண்மையா என்று பார்ப்போம்.

உண்மை சரிபார்ப்பு :

வைரல் காணொலியின் விவரங்களைச் சரிபார்க்க, வீடியோவிலிருந்து கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டோம். இந்தத் தேடல் 15 நவம்பர் 2024 அன்று 'photographycliclucknow' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அதே வீடியோவிற்கு ( காப்பகப்படுத்தப்பட்டது ) எங்களை அழைத்துச் சென்றது. இந்த காணொலியின் விளக்கத்தின்படி, காட்சிகள் வாரணாசியில் நடைபெற்ற தேவ் தீபாவளி கொண்டாட்டங்களுடன் தொடர்புடையவை. இந்த காணொளி நவம்பர் 2024 இல் இருந்து எடுக்கப்பட்டது மற்றும் 2025 மகா கும்பமேளா ஜனவரி 13, 2025 அன்று தொடங்குவதற்கு முந்தையது என்பதால், இந்த காணொலி 2025 மகா கும்பமேளாவிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல என்பது தெளிவாகிறது.

இந்தத் தேடலின் போது, ​​நவம்பர் 2024 இல் வாரணாசியில் நடைபெற்ற தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் காட்சிகளைக் காண்பிப்பதாகக் கூறி, அதே காணொலியை பல சமூக ஊடக பயனர்கள் Facebook , YouTube ( இங்கே , இங்கே ) மற்றும் Instagram ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) ஆகியவற்றில் பகிர்ந்ததையும் நாங்கள் கண்டறிந்தோம்.

வாரணாசியில் நடைபெற்ற 2024 தேவ் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய செய்தி அறிக்கைகளை இங்கே , இங்கே , இங்கே மற்றும் இங்கே காணலாம் .

2025 மகா கும்பமேளாவில் 45 நாள் மத நிகழ்வின்போது எந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டதாக எந்த செய்தி அறிக்கையும் இல்லை. கூடுதலாக, 2025 மகா கும்பமேளாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களை நாங்கள் ஸ்கேன் செய்தோம் ( இங்கே , இங்கே , இங்கே , மற்றும் இங்கே ). இருப்பினும், 2025 மகா கும்பமேளாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் குறித்த எந்த செய்திகளையும் அல்லது காட்சிகளையும் இந்த பக்கங்களில் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2025 மகா கும்பமேளாவின் இறுதி நாளான பிப்ரவரி 26, 2025 அன்று, இந்திய விமானப்படை மேளா வளாகத்தில் ஒரு அற்புதமான விமான கண்காட்சியை நடத்தியது ( இங்கே ).

இதன்மூலம் சுருக்கமாக, வாரணாசியில் இருந்து 2024 தேவ் தீபாவளி வாணவேடிக்கை நிகழ்ச்சி, 2025 மகா கும்பமேளாவின் காட்சிகள் என்று தவறாகப் பகிரப்படுகிறது.

Note : This story was originally published by ‘‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement