For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வருவாய் ஈட்டுவதற்காக இன்ஃபோசிஸ் - ரிலையன்ஸ் நிறுவனங்களால் செயலி உருவாக்கப்பட்டதா?

07:15 PM Nov 30, 2024 IST | Web Editor
வருவாய் ஈட்டுவதற்காக இன்ஃபோசிஸ்   ரிலையன்ஸ் நிறுவனங்களால் செயலி உருவாக்கப்பட்டதா
Advertisement

This News Fact Checked by Telugu Post

Advertisement

இந்தியர்கள் வருவாய் ஈட்டுவதற்காக இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்கள் புதிய வழிகளைப் பயன்படுத்துகின்றனர். விராட் கோலி, முகேஷ் அம்பானி, நீரஜ் சோப்ரா, சுதா மூர்த்தி போன்ற பிரபலங்கள் கேமிங் ஆப்ஸ், ஃபைனான்ஸ் ஆப்ஸ் போன்றவற்றை பிரபலப்படுத்தும் வகையில் வீடியோ தயார் செய்ய இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த வகையில் தயாரிக்கப்படும் வீடியோக்களால் மக்கள் எளிதில் ஏமாறுகிறார்கள். இதன்மூலம் கணிசமான நிதி வெகுமதிகளை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்த வீடியோக்கள் பெரும்பாலும் தொகுப்பாளர் ஒருவருடன் செய்தி சேனல் விவாதம் போல் இருக்கும்.

அந்த வகையில், ஃபேஸ்புக்கில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் தாங்கள் உருவாக்கிய செயலியைப் பற்றி விவாதிப்பது போல் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

வீடியோவின் மேல் வலது மூலையில் இந்தியா டுடே லோகோ உள்ளது. மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மூன்று பழம்பெரும் தொழில்முனைவோருடன் பேசுவதை இது காட்டுகிறது. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நந்தன் நிலேகனி ஆகியோர் உடனிருந்தனர்.

அந்த வீடியோவில், இந்நாட்டு மக்கள் அனைவரும் எளிதாகப் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு செயலியை நாங்கள் ஒன்றாக உருவாக்குகிறோம் என்று அவர்கள் சொல்வதைக் கேட்கலாம். இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து லாபகரமான நிதி பரிவர்த்தனைகளை வழங்கும் தானியங்கி செயலியை உருவாக்கியுள்ளன. நாராயண ஸ்வாமி அந்த செயலியை பயன்படுத்தியதை அவரே சரிபார்த்ததாக கூறுவதையும் கேட்க முடிந்தது. முகேஷ் அம்பானி சிறந்த பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித தலையீடு இல்லாமல் தானியங்கி செயலியை உருவாக்குவதாகவும் கூறுகிறார். நந்தன் நிலேகனி, “இது இந்திய குடிமக்கள், தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்காக இயங்கக்கூடியது. பொருளாதாரத்தை உயர்த்த இதைவிட சிறந்த வாய்ப்பு இல்லை” என்று கூறுகிறார்.

https://www.facebook.com/1793648448069437/videos/1545761592972787/?ref=embed_video&t=1

உரிமைகோரலின் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காணலாம்.

உண்மைச் சரிபார்ப்பு:

வைரலான புகாரில் உண்மை இல்லை. இந்த கோடீஸ்வரர்கள் அத்தகைய செயலியை உருவாக்கவில்லை, இந்த வீடியோ AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோவை கவனமாகச் சரிபார்த்தபோது, ​​ஆடியோ மற்றும் வீடியோவில் சில பின்னடைவுகள் இருப்பது கண்டறிய முடிந்தது. சில நேரங்களில் பிரபலங்களின் பெயர்களை அறிவிப்பாளர் தவறாக உச்சரிப்பதை கேட்க முடிந்தது. வீடியோவில் உதட்டு ஒத்திசைவு இல்லை என்பதும் கவனிக்கப்பட்டது.

இந்த வீடியோ கீப்ரேமின் தலைகீழ் படத் தேடலில், மே 2020 இல் ஆண்ட்ரியாஸ் வான் டி லார் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட நேர்காணலில் இருந்து நாராயண மூர்த்தி கிளிப்பை எடுத்திருப்பது கண்டறியப்பட்டது. மூர்த்தியின் உடை, இந்த வீடியோவின் பின்னணியும் வைரலான வீடியோவுடன் பொருந்துகிறது.

முகேஷ் அம்பானியைக் காட்டும் கீஃப்ரேம்களை படம்பிடித்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தி, டிசம்பர் 2020-ல் ட்விட்டர் (எக்ஸ்) பிளாட்ஃபார்மில் வெளியிடப்பட்ட வீடியோவில் அதே காட்சிகள் இருப்பது தெரிகிறது. இந்த ட்வீட்டை என்டிடிவி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/ndtv/status/1338740036670423041

வீடியோ டீப்ஃபேக் இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்ய, தெலுங்கு போஸ்ட் குழு Misinformation Combat Alliance டீப்ஃபேக்ஸ் பகுப்பாய்வு பிரிவை தொடர்பு கொண்டது. அப்போது, வைரல் வீடியோ AI ஆல் உருவாக்கப்பட்டது என்பதை DAU உறுதிப்படுத்தியது.

ஹைவ் மாடரேஷன் AI கருவியைப் பயன்படுத்தும் போது, ​​வீடியோவின் முதல் 30 வினாடிகள் “Not -AI” ஆக இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் மீதமுள்ளவை AI பயன்படுத்தி மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. நிலேகனியின் பிரேம்கள் இறுதிவரை பெரிதாக்கப்படும்போது அவரது காட்சிகள் AI எனத் தெரிகிறது.

Invid Verify கருவியின் ஒரு பகுதியாக இருக்கும் Hiya குரல் கண்டறிதல் கருவியைப் பயன்படுத்தி ஆடியோ சரிபார்க்கப்பட்டது. ஹியாவைப் பயன்படுத்தி, குரல்(கள்) AI ஆல் உருவாக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

TrueMedia ஆடியோ, விஷுவல் டிடெக்டர்கள் மற்றும் AI ஆகியவை ஆடியோ கையாளப்பட்டதை கண்டுபிடித்துள்ளன.

முடிவு:

எனவே, தொழில்துறை ஜாம்பவான்கள் ஒன்றிணைந்து மாதம் 3 மில்லியன் வரை சம்பாதிக்கும் செயலியை உருவாக்கியுள்ளனர் என்ற வைரல் வீடியோ உண்மையல்ல. இது AI ஆல் உருவாக்கப்பட்டது. வைரலான புகாரில் உண்மை இல்லை.

Note : This story was originally published by ‘Telugu Post’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement