For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வக்பு மசோதா: நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் - நவாஸ் கனி எம்பி பேட்டி!

04:32 PM Aug 07, 2024 IST | Web Editor
வக்பு மசோதா  நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம்   நவாஸ் கனி எம்பி பேட்டி
Advertisement

வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

Advertisement

சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்களது நிலங்கள் மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த சொத்துகள் ஆகியவற்றுக்கு  இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என  குறிப்பிடப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

புதிய சர்ச்சை | வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! - News7 Tamilஇவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு, முஸ்லிம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல் மற்றும் ஆன்மீக தலங்கள், தர்காக்கள் பராமரிப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் செலவிடப்பட்டு வருகிறது.

இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன.

இதற்கிடையே, வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுநர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா தாக்க செய்யப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம் என ராமாநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் லீக் கட்சி எம்பியுமான நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது..

”மத்திய அரசுக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூற விரும்புகிறோம். வக்பு வாரிய மசோதா நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில் , முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர்.  வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் அதற்கான வரைவு அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னோர்களால் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொண்டு செய்வதற்காகவும் , பள்ளிவாசல்களை பராமரிக்கவும், கல்வி தொண்டு செய்யவும் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக சொத்துக்கள் வக்பு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வக்பு வாரியங்கள் நிர்வாகித்து வருகிறது. இந்த நிலையில் வக்பு வாரியத்திற்கு அதிகாரத்தை குறிக்கும் வகையிலும், தீர்ப்பாயத்தையும் அதிகாரத்தை குறைக்கும் வகையிலே, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என கூறுகிறார்கள், ஆனால் ஏற்கனவே வக்பு வாரியத்தில் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.

நாட்டில் அதிக சொத்துக்கள் உடைய பட்டியலில் மூன்றாவது இடத்தில் வக்பு வாரியம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை முறையாக மீட்டெடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டம் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டபூர்வமாக வழி வகை செய்யும். பலநூறு ஆண்டுகள் பழமையான உரிய ஆவணங்கள் அல்லாத வக்பு இடங்களை கைப்பற்றவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எதிர்ப்பதோடு, இந்தியா கூட்டணி ஆதரவையும் கோருவோம். சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக உரிய முறையில் மத்திய அரசு ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். வரக் கூடிய 3 மாநில தேர்தல் நேரத்தில் அரசியலுக்காக இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் இந்த மசோதா சட்டமாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் , மத்திய அரசுக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூற விரும்புகிறோம்.  மத்திய அரசு தங்களுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் லீக் சட்ட வாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.”

இவ்வாறு நவாஸ் கனி எம்பி தெரிவித்தார்.

Tags :
Advertisement