For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எரிமலை வெடிப்பு எதிரொலி - இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்!

07:03 PM May 02, 2024 IST | Web Editor
எரிமலை வெடிப்பு எதிரொலி   இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்
Advertisement

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisement

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது.  பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

எரிமலை வெடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி,  கல்லூரிகள் மூடப்பட்டன.  இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டன.

Tags :
Advertisement