Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"25 ஆண்டுகளாக கண்ட கனவு நிறைவேறி உள்ளது" - நடிகர் விஷால்!

10:14 PM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

நடிகராக இருக்கும் விஷால் தற்போது இயக்குநராக மாறி இருக்கிறார். இயக்குநராக வேண்டும் என்பது தனது 25 ஆண்டு கனவு மற்றும் ஆசை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

நடிகர் விஷால் அடுத்தடுத்து சிறப்பான திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'செல்லமே' திரைப்படத்தில் தொடங்கிய அவரது நடிப்புப் பயணம் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இவர் முன்னதாக நடிகர் அர்ஜுனுடன் உதவி இயக்குனராக 'வேதம்' உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்து தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கினார்.

'செல்லமே' திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய விஷால் நடிப்பில் கடந்த ஆண்டில் 'மார்க் ஆண்டனி' திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஹரி இயக்கத்தில் 'ரத்னம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், ரத்னம் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகளை தான் தொடங்கி உள்ளதாகவும் வரும் மே மாதம் இந்தப் படத்தின் படப்படிப்பு  தொடங்கவுள்ளதாகவும் அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

“அதில் தன்னுடைய 25 ஆண்டு கால கனவு தற்போது நனவாகியுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்னவாக வேண்டும் என்று யோசித்து திரைத்துறைக்கு வந்தேனோ தற்போது அது நனவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என்று தன்னுடைய தந்தையிடம் கேட்டதாகவும் அவர்தான் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக தன்னை இணைத்து விட்டதாகவும் விஷால் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய பாதையில் நடிகராக மாறியதாகவும் இத்தனை ஆண்டு காலம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தான் நடிகனாக தொடர்ந்து வருவதாகவும் அதற்கு ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :
actordebutante directordetective2moviethupparivalan2TP2vishal
Advertisement
Next Article