For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூ விற்கும் தாயிடம் #IPhone வாங்கிக் கேட்டு அடம் - 3 நாள் பட்டினி கிடந்து சாதித்த மகன்!

07:53 AM Aug 19, 2024 IST | Web Editor
பூ விற்கும் தாயிடம்  iphone வாங்கிக் கேட்டு அடம்   3 நாள் பட்டினி கிடந்து சாதித்த மகன்
Advertisement

பூ விற்கும் பெண் ஒருவரிடம் அவரது மகன் 3 நாட்கள் பட்டினி கிடந்து ஐபோன் வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போன் இல்லாத ஒருவரை பார்ப்பதே அரிதாக உள்ளது. பெரும்பாலோனோர் சமூக வலைதளங்களிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். வசதி இல்லாவிட்டாலும் அதிக விலைமதிப்புள்ள மொபைலை வாங்கவே இங்கு பலரும் ஆசைபடுகின்றனர். பெற்றோரிடம் அடம்பிடித்தாவது அதனை வாங்க வேண்டும் என பலரும் எண்ணுகின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, கோயிலுக்கு வெளியே பூ விற்று வாழ்க்கையை நடத்தும் பெண் ஒருவரிடம் அவரது மகன் தனக்கு ஐபோன் வாங்கி தரவேண்டும் என அடம்பிடித்திருக்கிறார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் அவரது மகன் மூன்று நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார். இதனால் கவலை அடைந்த அந்த பெண் தனது மகனுக்கு ஐபோன் வாங்க பணம் கொடுத்துள்ளார்.

மொபைல்கடையில் ஐபோன் வாங்கிய மகன் மற்றும் அவரது தாயிடம் பேட்டி எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் பேசிய அவரது அம்மா கூறுகையில், "நான் ஒரு கோயிலுக்கு வெளியே பூ விற்கிறேன். என் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என அடம்பிடித்து 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. மகன் சாப்பிடாமல் இருந்ததால் அவனுக்கு நான் ஐபோன் வாங்குவதற்கு பணம் கொடுத்தேன். அந்த பணத்தை சம்பாதித்து தனக்கு திருப்பி தருமாறு என் மகனிடம் நான் கூறியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ நேற்று (ஆகஸ்ட் 18) இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் கலவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement