உக்ரேனிய ராணுவ வீரர்கள் அதிகளவில் சரணடைவதாக வைரலாகும் காணொலி - உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI’
இராணுவ சீருடை அணிந்த சிலர் கைகளை உயர்த்தி நடப்பது போன்ற 30 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலியைப் பகிர்ந்த பயனர்கள் இந்தக் காட்சி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரேனிய இராணுவம் சரணடைவதைப் பற்றியது என்று கூறுகின்றனர்.
PTI உண்மை சரிபார்ப்பில் இந்த வைரல் கூற்று போலியானது என்று கண்டறியப்பட்டது. விசாரணையில், அந்த காணொலி 2022 ஆம் ஆண்டு மரியுபோலில் உக்ரேனிய கடற்படையினர் சரணடைவதைப் பற்றியது என்றும், குர்ஸ்க் பகுதியில் நடந்து வரும் மோதலுக்கு இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.
வைரல் கூற்று:
சமூக ஊடக தளமான X இல் ஒரு பயனர் மார்ச் 11, 2025 அன்று வைரலான வீடியோவைப் பகிர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதினார், "குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனியர்கள் அதிக எண்ணிக்கையில் சரணடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டீப் ஸ்டேட் ப்ராக்ஸி போர் முடிவுக்கு வந்ததும் அவர்கள் நன்றாக நடத்தப்படுவார்கள் என்றும் உயிருடன் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்ப முடியும் என்றும் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்`
"ரஷ்யாவின் குர்ஸ்கில் ஜெலென்ஸ்கியின் ராணுவ துருப்புக்கள் அதிக எண்ணிக்கையில் சரணடைகின்றன" என்று எழுதப்பட்ட ஒரு வாசகமும் வீடியோவில் காணப்படுகிறது. பதிவின் காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க.
அதே நேரத்தில், மற்றொரு பயனர் மார்ச் 13, 2025 அன்று பேஸ்புக்கில் வைரலான காணொலியைப் பகிர்ந்து கொண்டார், அதில், “ஜெலென்ஸ்கியால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உக்ரேனிய வீரர்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையில் சரணடைவதாக தகவல்கள் உள்ளன” என்று எழுதினார். இடுகை காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க .
எங்கள் அடுத்த விசாரணையில், ஏப்ரல் 5, 2022 அன்று ஒரு ரஷ்ய செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையைக் கண்டோம். அந்த வைரல் காணொலி இங்கேயும் இருந்தது. அதன் அறிக்கையின்படி, “இந்த வீடியோவில் மரியுபோலில் பிடிபட்ட உக்ரேனிய கடற்படையினர் காட்டப்படுகிறார்கள். அறிக்கைகளின்படி, 267 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தானாக முன்வந்து சரணடைகின்றனர்.
இவர்கள் 503வது சுதந்திர மரைன் பட்டாலியனின் உயிர் பிழைத்த உறுப்பினர்கள். இப்போது அவர்களின் குடும்பங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க.
எங்கள் விசாரணையில், வைரலான காணொலி பழையது என்றும், 2022 இல் மரியுபோலில் உக்ரேனிய கடற்படையினர் சரணடைவது போன்றது என்றும் கூறப்படுகிறது. இதற்கும் குர்ஸ்க் பகுதியில் நடந்து வரும் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
முடிவுரை :
எங்கள் விசாரணையில், வைரலான காணொலி பழையது என்றும், 2022 இல் மரியுபோலில் உக்ரேனிய கடற்படையினர் சரணடைவது போன்றது என்றும் கூறப்படுகிறது. இதற்கும் குர்ஸ்க் பகுதியில் நடந்து வரும் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.