காஷ்மீர் பண்டிட்கள் மீதான வன்முறைகள் குறித்து பாகிஸ்தான் இளைஞர் பேசியதாக வைரலாகும் காணொலி - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Vishvas News’
காஷ்மீர் பண்டிதர்கள் குறித்து இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் அவர் காஷ்மீர் பண்டிதர்களின் படுகொலையைப் பார்த்ததாகக் கூறுவதைக் கேட்கலாம். அதே நேரத்தில், கடந்த காலத்தில் செய்த தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். வீடியோவில் நெறியாளரையும் காணலாம். இதைப் பகிர்ந்த சில பயனர்கள் இந்த காணொலி பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வசிக்கும் ஒரு இளைஞர் காஷ்மீர் பண்டிதர்கள் மீதான அட்டூழியங்கள் குறித்துப் பேசியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
விஸ்வாஸ் நியூஸ் விசாரணை செய்ததில் வைரலான காணொலியில் ANN நியூஸ் லோகோ இருப்பதைக் கண்டறிந்தது. இது ஜம்மு காஷ்மீரை தளமாகக் கொண்ட ஒரு இந்திய சேனல். இதில் காணப்படும் இளைஞனின் பெயர் ஜாவேத் பேக், அவர் குல்மார்க் அருகே வசிக்கிறார். இந்த காணொலி தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது. இந்தக் கூற்றை விஸ்வாஸ் நியூஸ் ஏற்கனவே விசாரித்துள்ளது.
வைரல் பதிவு
X பயனரான ஜிதேந்திர பிரதாப் சிங் மார்ச் 19 அன்று இந்த காணொலியை ( காப்பக இணைப்பு ) பகிர்ந்து கொண்டார், இது பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து வந்ததாகக் கூறினார். இதேபோல பேஸ்புக் பயனர் பிரவீன் தேஷ்பக்த் இந்த காணொலியை ( காப்பக இணைப்பு ) பதிவிட்டு எழுதினார்.
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் இந்தியப் பகுதியைச் சேர்ந்த ஒரு காஷ்மீரி முஸ்லிம், பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலில் உண்மையைச் சொன்னார். காஷ்மீரைச் சேர்ந்த மற்ற முஸ்லிம்களும் இந்திய சேனல்களில் இதுபோன்ற உண்மையைச் சொல்ல தைரியம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என குறிப்பிட்டிருந்தார்.
காணொலியில் காணப்படும் இளைஞர், காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டதாகக் கூறுகிறார். கொல்லப்பட்ட மக்கள் எந்த காஷ்மீர் முஸ்லிமையும் கொல்லவில்லை, அவர்கள் நிராயுதபாணிகளாக இருந்தனர். அது இனப்படுகொலை இல்லையென்றால் வேறு என்ன? காஷ்மீர் பண்டிட்களைக் கொன்றவர்கள் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்கள் தந்தையின் காலத்தில் என்ன தவறுகள் செய்யப்பட்டிருந்தாலும், அந்தத் தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மை சரிபார்ப்பு :
இந்த வைரல் காணொலி ANN செய்திகளின் லோகோவைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், கூகுளில் தேடினோம். இந்த காணொலி மார்ச் 15, 2022 அன்று ANN News Kashmir என்ற YouTube சேனலில் பதிவேற்றப்பட்டது. அதன் விளக்கம், “1990 ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் கொல்லப்பட்டதற்கு காஷ்மீர் முஸ்லிம்களும் சமமாகப் பொறுப்பாளிகள் - ஜாவேத் பேக், அரசியல் ஆர்வலர்”.என குறிப்பிடப்பட்டிருந்தது.
யூடியூப் சேனலைப் பற்றி ஆலிமி நியூஸ் நெட்வொர்க் (ANN நியூஸ்) ஜம்மு காஷ்மீரின் தொலைக்காட்சி செய்தி சேனல் என்று எழுதப்பட்டுள்ளது . இதில் கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஸ்ரீநகரின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது .
அதன் எங்களைப் பற்றி பிரிவு, ANN நியூஸ் என்பது இந்தியாவில் ஆலிமி நியூஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் ஒரு வணிக தொலைக்காட்சி செய்தி வலையமைப்பு என்று கூறுகிறது. இதன் தலைமையகம் ஸ்ரீநகரில் உள்ளது.
இது தொடர்பாக, நாங்கள் ANN செய்தி தலைமை ஆசிரியர் தாரிக் பட்டைத் தொடர்பு கொண்டோம். அந்த வீடியோவில் காணப்படும் தொகுப்பாளர் தான் என்று அவர் கூறுகிறார் . இது காஷ்மீரை தளமாகக் கொண்ட செய்தி சேனல். அது பாகிஸ்தானியர் என்ற கூற்று தவறானது. அந்த நேரத்தில் அவர் காஷ்மீரைச் சேர்ந்த ஜாவேத் பேக்குடன் பேசியிருந்தார்.
நாங்கள் ஜாவேத் பேக்கையும் தொடர்பு கொண்டோம். அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கவில்லை என்று கூறினார் . அவர் குல்மார்க் அருகே வசிக்கிறார். இந்தப் பதிவு ஸ்ரீநகரில் நடந்தது. இந்த சேனலும் பாகிஸ்தானியதல்ல, இந்திய சேனலே என்பது நிரூபனமாகிறது.
முடிவு:
காஷ்மீர் பண்டிதர்கள் மீதான அடக்குமுறை பற்றி ஒரு இளைஞன் பேசும் காணொலி பாகிஸ்தான் ஊடகத்தில் இருந்து வந்ததாக பரவுகிறது. அவை மாறாக இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் காணப்படும் இளைஞரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல, இந்தியாவில் வசிப்பவர்தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.