This News Fact Checked by ‘PTI’
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவிற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து எனக் கூறி, பல சமூக ஊடக பயனர்கள் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இருப்பினும், பிடிஐ உண்மை சரிபார்ப்பு விசாரணையில், வைரல் வீடியோ எகிப்திலிருந்து நடந்த சம்பவத்தி படங்கள் என்றும், 2020 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்றும் கண்டறியந்துள்ளது. எண்ணெய் குழாய்வழியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததை இந்த கிளிப் காட்டுகிறது. இந்த வைரல் வீடியோ சமீபத்தியது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது மேலும் இந்தியாவின் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவுடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 9 ஆம் தேதி, மகா கும்பமேளாவில் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் வாகனங்கள் தீயில் எரிந்ததைக் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த காணொலியில் "மஹா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து; பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 40 முதல் 50 வாகனங்கள் எரிந்து சாம்பலாயின என்று எழுதப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை பிடிஐ Desk InVid Tool Search மூலம் வீடியோவை இயக்கி, சில கீஃப்ரேம்களைக் கண்டறிந்தது. கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது அதே வீடியோவை இதே கூற்றைக் கொண்ட பல பயனர்கள் பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்தோம். இதுபோன்ற இரண்டு இடுகைகளை இங்கேயும் இங்கேயும் காணலாம் ,
மேலும் அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை முறையே
இங்கேயும் இங்கேயும் பார்க்கலாம் .

தேடல் முடிவுகளை மேலும் ஆராய்ந்தபோது, ஜூலை 15, 2020 அன்று குளோபல் நியூஸ் பதிவேற்றிய ஒரு யூடியூப் காணொலியை டெஸ்க் கண்டது, அதன் தலைப்பில் “எகிப்தில் குழாய்வழியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்குப் பிறகு கார்கள் தீப்பிடித்தன”.
அறிக்கைக்கான இணைப்பு இங்கே மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
இது தொடர்பாக அசல் மற்றும் வைரல் படங்கள் கீழே ஒப்பீட்டுக்காக காட்டப்பட்டுள்ளது.
இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவின் அதே வீடியோ என்பதைக் காட்டுகிறது. மேலும், அதே காட்சியை வேறு கோணத்தில் காட்டும் மற்றொரு காணொலியை டெஸ்க் கண்டது, அது ஜூலை 14, 2020 அன்று யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது. அதன் தலைப்பில் “கெய்ரோ-இஸ்மாயிலியா பாலைவன சாலையில் எரிவாயு குழாய் வெடிப்பு” என எழுதப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கான இணைப்பு இங்கே மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.

இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, டெஸ்க் கூகுள் மூலம் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடலை நடத்தியது, அது ஜூலை 15, 2020 தேதியிட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையை எங்களுக்கு வழங்கியது. அந்த அறிக்கையின் தலைப்பு: “எகிப்திய எண்ணெய் குழாய் தீ விபத்து 17 பேருக்கு காயம்” அறிக்கைக்கான
இணைப்பு இங்கே .
"கெய்ரோ புறநகர்ப் பகுதியில் பரபரப்பான நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஷுகைர்-மோஸ்டோரோட் குழாயில் இருந்து எண்ணெய் கசிந்ததைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது, இதில் 17 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்” என என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த வீடியோ இந்தியாவின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுடன் தொடர்புபடுத்தி பகிரப்பட்டு வருகிறது.

முடிவுரை
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவிற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறி ஒரு வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த வைரல் வீடியோ 2020 ஆம் ஆண்டு எகிப்தில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்த பழைய வீடியோ என டெஸ்க் விசாரணையில் கண்டறிந்துள்ளது. எகிப்திலிருந்து வந்த பழைய வீடியோ, இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுடன் தொடர்புபடுத்தி சமீபத்தியதாக தவறாகப் பகிரப்பட்டது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.