Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை - 32பேர் உயிரிழப்பு, ஊரடங்கு அமல்!

08:16 PM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் இதுவரை 32 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. கடந்த 10-ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.  இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 16ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.   போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்வி, அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 93% இடங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் மாணவர்கள் கலவரம் ஓய்ந்துள்ளது. இதன் பின்னர் சில நாட்களுக்கு பிற்கே இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆக. 4) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
BangaladeshReservationTensionViolence
Advertisement
Next Article