Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவு!

02:26 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று (ஜூலை 10) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது குடும்பத்தினருடன் அன்னியூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42வது வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

மதியம் ஒரு மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவாதியுள்ளன. வாக்கு பதிவுகள் நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்ற 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Tags :
DMKElection commissionElections2024News7Tamilnews7TamilUpdatesNTKPMKTamilNaduvikravandiVikravandi By ElectionVikravandi Bye Election
Advertisement
Next Article