For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயகாந்த் மறைவு - சீர்காழி மற்றும் ஆடுதுறையில் வியாபாரிகள் கடையடைப்பு.!

09:05 AM Dec 29, 2023 IST | Web Editor
விஜயகாந்த் மறைவு   சீர்காழி மற்றும் ஆடுதுறையில் வியாபாரிகள் கடையடைப்பு
Advertisement

விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழி மற்றும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் வியாபாரிகள் கடையடைத்து இரங்கலை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது.  அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி,  அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும்,  2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  இந்த நிலையில் விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக கொண்டு வருகின்றனர்.

Imageஊர்வலமாக கொண்டு வரப்படும் விஜயகாந்த் உடலை பார்த்து “கேப்டன் .. கேப்டன்” என கதறிய அழுதவாறு பொதுமக்களும் , தொண்டர்களும் அவரை பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் காலை 6மணி அளவில் விஜயகாந்தின் உடல் தீவுத் திடலுக்கு வந்தடைந்தது. இன்று பிற்பகல் 1மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.  பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதேபோல தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடைகள் அடைத்து வணிகர்கள் தங்களது இரங்கலை தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement