For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கும்பகோண வீடுகளில் நிரம்பும் விஜய் ஸ்டிக்கர்;தொண்டர்கள் தொடங்கிய ஸ்டிக்கர் பிரச்சாரம்!

இந்த ஸ்டிக்கர் பிரச்சார முறை, மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
03:39 PM Jul 24, 2025 IST | Web Editor
இந்த ஸ்டிக்கர் பிரச்சார முறை, மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கும்பகோண வீடுகளில் நிரம்பும் விஜய் ஸ்டிக்கர் தொண்டர்கள் தொடங்கிய ஸ்டிக்கர் பிரச்சாரம்
Advertisement

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், திமுகவினர் "ஒரணியில் தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கர்களை வீடு வீடாக ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதே போன்று, புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தினர், தங்களது தலைவர் விஜய்யை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கும்பகோணம் பகுதிகளில் உள்ள வீடுகளில், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்" என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை தமிழக வெற்றி கழகத்தினர் ஒட்டி வருகின்றனர்.

இது ஒரு வகையில், வரப்போகும் தேர்தலை நோக்கிய ஒரு ஆரம்ப கட்ட பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இத்தகைய ஸ்டிக்கர் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடையே தங்கள் தலைவரை கொண்டு செல்லும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த ஸ்டிக்கர் பிரச்சாரங்கள், அரசியல் கட்சிகள் தங்கள் செய்தியை வாக்காளர்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் ஒரு முறையாக கையாளுகின்றனர்.

இதனை கண்ட அரசியல் விமர்சகர்கள் இந்த ஸ்டிக்கர் பிரச்சார முறை, மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags :
Advertisement