Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான்" - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

02:03 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

Advertisement

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது,

"விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். மேலும், திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி | நேரில் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  மழை, வெள்ளம் காரணமாக, தமிழ்நாடு மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துயரத்தை அனுபவித்தீர்கள். அதிக வலியை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்றார். 

Tags :
BharathidasanUniversityConvocationNarendramodiTrichyTrichyAirportvijaykanth
Advertisement
Next Article