Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வீட்டில் துப்பாக்கிகளை சுத்தம் செய்த பெண்! வைரலான வீடியோவால் பரபரப்பு!

01:03 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

பெண் ஒருவர் துப்பாக்கியை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த ஆயுதத் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement

அண்மையில் சில துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு, ஒரு பெண் சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோவை பரப்பியவரின் முகவரியை வைத்து காவல்துறையினர் விசாரணைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், மொரேனா மாவட்டத்தில் மஹுவா காவல்நிலையத்துக்கு உள்பட்ட கஷேஷ்புரா கிராமத்தில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இரவு 8 மணிக்கு நடந்த சோதனையில், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வந்த ஆயுதத் தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக சக்தி கபூர் என்பவரையும் அவரது தந்தையையு கைது செய்தனர். இந்நிலையில், வீடியோவில் இருந்த பெண்யைத் தேடி வருகிறார்கள். இவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பீகார் பாபா சித்தேஸ்வர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 9 பேர் படுகாயம்!

ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்களும் அங்கு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து, தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர். இவர்கள் மூலம், சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தல் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
Illegal Arms FactoryMadhya pradeshMorenaPoliceVideoWashing Gunswoman
Advertisement
Next Article