ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI’
காவலர் ஒருவர், கருப்பு நிறக் கண்ணாடிகள் இருந்ததால் காரை தடுத்து நிறுத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் வீடியோவில், காரின் அருகே நின்ற ஒருவர் எம்.எல்.ஏ என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரியிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த காவலர் "நீங்கள் என்னை இடைநீக்கம் செய்யலாம், ஆனால் நான் அவரை காரை எடுத்துச் செல்ல விடமாட்டேன்" என்று கூறுகிறார். பயனர்கள் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு போலீஸ்காரரைப் பாராட்டி வருகின்றனர்.
பிப்ரவரி 12, 2025 அன்று பேஸ்புக்கில் வைரலான காணொளியைப் பகிர்ந்த அனுராக் திவாரி எனும் பயனர் “இது வெறும் ரீல் அல்ல, இந்த காணொலி செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து சில லஞ்சங்களுக்காக அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிக்கும் காவல்துறை நிர்வாகத்தின் சீர்கேட்டிலிருந்து ஒரு விதிவிலக்கு. நாட்டிற்கு இப்படிப்பட்ட போலீசார் தேவை. எம்.பி.க்களாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் சரி, யாரையும் காவல்துறை கேள்வி கேட்க மாட்டார்கள். “சல்யூட் சர் ஜி” என பதிவிடப்பட்டது. பதிவின் இணைப்பு , காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு :
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, PTI உண்மைச் சரிபார்ப்பு மையம், வைரல் காணொலியின் முக்கிய பிரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்தியது, அதில் பிப்ரவரி 6, 2025 அன்று மான்டி தீபக் சர்மாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வைரல் காணொலியைக் கண்டறிந்தோம். வீடியோவின் 16வது வினாடியில் உள்ள மறுப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளபடி, இந்த காணொளி மான்டி தீபக் சர்மாவால் உருவாக்கப்பட்டது.
முடிவு :
எங்கள் விசாரணையில், வைரலான காணொளி உண்மையானது அல்ல, மாறாக ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. சமூக வலைதள பயனரான மான்டி தீபக் சர்மா இதை பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.