Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என பரவும் வீடியோ போலியானது - இது குறித்து Newschecker கூறுவது என்ன?

03:35 PM May 18, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by Newschecker

Advertisement

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோ உண்மையல்ல அது கோயம்புத்தூரில் உள்ள அருவி என கண்டறியப்பட்டுள்ளது.

“பொன்னாரின் இமாலய சாதனை!! குமரியில் புதிதாக அருவி திறப்பு !! #marthandambridge #marthandam மேம்பாலம்!! உலக மகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு இந்த சங்கி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருக்கும் மேம்பாலத்தில் இருந்து அருவிபோல் நீர் கொட்டுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

https://x.com/cebi_sweety/status/1791142784755511566

இந்த காணொலியின் மூலம் கன்னியாகுமரி எம்பியாகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் செய்திருக்கிறார். அதனால்தான் மேம்பாலம் வழியாக அருவிபோல் நீர் கொட்டுகிறது என இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர்.

உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் ஆய்வுக்கு உட்படுத்தியது.  அதன்படி குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து நியூஸ் செக்கர் தேடியது.

இத்தேடலின் முடிவில் இச்சம்பவம் கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து நீர் கொட்டும் காட்சி என  இதே வீடியோ பல சமூக வலைதளங்களில் பரவி வருவதை காண முடிந்தது.

மேலும் இந்த வீடியோவை வைத்து சில தனியார் செய்தி நிறுவனங்கள் கோவையில் உள்ள மேம்பாலத்தில் நீர் கொட்டும் காட்சி குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

முடிவு :

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும்.  எனவே குமரியில் நடந்ததாக பரப்பப்படும் சம்பவம் பொய் என  உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சம்பவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று  கேட்டுக் கொள்கின்றோம்.

Note : This story was originally published by NewsChecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

 

Tags :
CoimbatoreFact Checkfalse newskaniyakumariwater falls
Advertisement
Next Article