For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏப்.25, 26 உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு - ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

ஏப்ரல் 25, 26 தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு.
01:25 PM Apr 22, 2025 IST | Web Editor
ஏப் 25  26 உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு   ஜகதீப் தன்கர் பங்கேற்பு
Advertisement

தமிழ்நாடு ஆளுநராக ஆர். என். ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் 2022-முதல் துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி நடத்தி வந்தார்.

Advertisement

இந்த நிலையில், 4வது ஆண்டாக ஏப். 25 முதல் 26-ஆம் தேதிகளில் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. துணை வேந்தர்கள் மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் துவங்கி வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா சட்டமானதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது.

இந்நிலையில் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement