Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்! நிர்வாகம் அறிவிப்பு!

07:10 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிப்பை முன்னிட்டு வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன்.4) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும். வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  பார்வையாளர்கள் நெகிழி பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags :
#summer holidayChennaiPark ManagementTouristsVandalur Zoo
Advertisement
Next Article