வைகோ சகோதரி மறைவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த சூழலில், அவர் வயது மூப்பு காரணமாக நேற்று (மே 29) காலமானார். சரோஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வைகோவின் சகோதரி சரோஜா அம்மையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்கள் : ”பாமகவில் திலகபாமா பொருளாளராக தொடருவார்” – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களின் சகோதரி திருமதி சரோஜா அம்மையார் அவர்கள் காலமானதையொட்டி அவரது இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, திரு. வைகோ மற்றும் அவரது… pic.twitter.com/okUPLpG3Bd
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2025
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
"மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது சகோதரி மீது அளவற்ற பாசம் வைத்திருந்தவர் வைகோ. தன்னுடைய உடன்பிறந்த சகோதரியை இழந்து தவிக்கும் வைகோவுக்கும் அவரது எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.