மீட்பு பணி அவசரம்: தென்திருப்பேரையில் சிக்கியுள்ள 300 க்கும் மேற்பட்டோரை மீட்க கோரிக்கை!
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை கிராமத்தில் சிக்கி இருக்கும் 300-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை கிராமத்தில் சென்னையிலிருந்து சாத்தான்குளம், திசையன்விளை போன்ற ஊர்களுக்கு டிச.17 அன்று மாலை புறப்பட்ட 20க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளோடு தென்திருப்பேரை கிராமத்தில் வெள்ளத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட பயணிகள் இருப்பதாகவும் அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைப்பது மிகவும் சிறமமாக உள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்திருப்பேரை கிராமத்தை சேர்ந்த மக்கள் தான் தங்களால் முடிந்த உணவுகளை கொடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். அரசு தரப்பில் எந்த உதவிகளும் செய்ய படவில்லை என்றும், அவர்களை மீட்பதற்கக்கான எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை என அப்பகுதியில் சிக்கிய ஓட்டுநர் தெரிவித்துள்ளார். எனவே, தென்திருப்பேரை பகுதியில் ஆம்னி பேருந்துகளில் சிக்கி இருப்பவர்களை அரசு உடனடியாக மீட்பதற்க்கான நடவடிக்கையை எடுத்திடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.