For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படை...தீவிரமடைந்த போர் - அவசர நிலை அறிவிப்பு!

10:31 AM Aug 10, 2024 IST | Web Editor
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படை   தீவிரமடைந்த போர்   அவசர நிலை அறிவிப்பு
Advertisement

ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்க்ஸுக்குள் உக்ரைன் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

இந்த சூழலில் ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்க்ஸுக்குள் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் சமீபத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது.  உக்ரைன் படையினர் அங்கு 4 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கூா்க்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் ராணுவத்தின் முயற்சியை ரஷ்யப் படையினா் வெற்றிகரமாக முறியடித்துவருகின்றனா். அந்தப் பகுதியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு போரிட்டு வரும் ரஷ்யப் படையினருக்கு பலம் சோ்ப்பதற்காக கூடுதல் படைப் பிரிவுகள் மற்றும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூா்க்ஸ் பகுதிக்குள் ஊடுருவிய 280 உக்ரைன் படையினா் கொல்லப்பட்டனா்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement