For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Trichy | நடுவானில் 2 மணி நேரமாக வட்டமிடும் விமானம்! 144 பயணிகள் பரிதவிப்பு!

07:50 PM Oct 11, 2024 IST | Web Editor
 trichy   நடுவானில் 2 மணி நேரமாக வட்டமிடும் விமானம்  144 பயணிகள் பரிதவிப்பு
Advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, தரையிறங்க முடியாமல் சுமார் 2 மணி நேரமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருக்கிறது.

Advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 144 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது. விமானம் தரையிலிருந்து மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அந்த விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அந்த விமானம் சுமார் 2 மணிநேரமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருக்கிறது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு பிறகு விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. விமானத்தில் உள்ள பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர்.

Advertisement