Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி #NIT விடுதி காப்பாளர்கள் 3 பேர் பதவி விலகல்! பின்னணி என்ன?

02:57 PM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சையை அடுத்து மகளிர் விடுதி காப்பாளர்கள் 3 பேர் விலகினார்.

Advertisement

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் விடுதியில் இருந்த மாணவியரிடம், ஒப்பந்த ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் 12 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, விடுதி வார்டன் உள்ளிட்டோர் மாணவர்கள் முன்னிலையில் மன்னிப்பு கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி காப்பாளர் பேபி பதவி விலகினார். மேலும் 2 விடுதிக்காப்பாளர்களான சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியோரும் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து என்ஐடி கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
NITProtestSexual harassmentTrichy
Advertisement
Next Article