டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு.. ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டிங் - கெத்தாக வெற்றி பெற்ற மும்பை அணி!
2025 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை இன்று(ஏப்ரல்.23) எதிர்கொண்டு வருகிறது. தெலங்கானாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி சார்பில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹெட் டக் அவுட்டாக, தொடர்ந்து அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த இஷான் கிஷன் 1 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி தடுமாறி வந்தது.
இதையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் எடுத்து ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அவரது ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு ஓரளவு கை கொடுக்கும் வகையில் அமைந்தது.
இவருக்கடுத்து வந்த அபினவ் மனோகர் தனது பங்கிறகு 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 143 ரன்கள் அடித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து மும்பை அணி 144 என்ற இலக்கை எளிமையாக சேஸிங் செய்தது
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரிக்கில்ஸன் அதிரடியாக ஆடத் தொடங்கினர். இதன் பின்னர் ரிக்கில்ஸன் ஆட்டமிழக்க அடுத்த வந்த வில் ஜாக்ஸும் அவுட் ஆகினார். இதனைத் தொடர்ந்து சூர்ய குமார் யாதவுடன் கைகோர்த்த ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர்.
அணியின் 130 என இருக்கும்போது ரோஹித் சர்மா 70 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் மலிங்காவின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து சூர்யகுமார் யாதவுடன் திலக் வர்மா கைகோர்த்த நிலையில் மும்பை அணி எளிமையாக வெற்றி பெற்றது. 15.4 ஓவர்களிலேயே 7விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. 4ஓவர்கள் வீசி 26ரன்கள் மட்டுமே கொடுத்து 4விக்கெட்கள் வீழ்த்திய டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.