For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உ.பி.யில் ரயில் விபத்து - ஒரு பயணி பலி; இருவர் படுகாயம்!

04:10 PM Jul 18, 2024 IST | Web Editor
உ பி யில் ரயில் விபத்து   ஒரு பயணி பலி  இருவர் படுகாயம்
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின்  பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் கோண்டா மற்றும் ஜிலாஹி இடையே அமைந்துள்ள பிகௌராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பயணிகளை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

12 பெட்டிகளில், 4 ஏசி பெட்டிகள் தரம் புரண்டுள்ளன. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். விபத்து குறித்து ஆலோசனை நடத்திய அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement