Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தல் - பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி!

கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
10:01 PM Jun 17, 2025 IST | Web Editor
கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
Advertisement

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் கணவன் வாங்கிய ரூ 80 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாததற்ககாக அவருடைய மனைவி சிரிஷா என்ற பெண்ணை கடன் கொடுத்தவர்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக முனி கண்ணப்பா,அவரது மனைவி வெங்கடம்மா, மகன் ராஜா மற்றும் மருமகள் ஜகதீஸ்வரி ஆகிய 4 பேர் மீது குப்பம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிரிஷாவிடம் ஆந்திரா மாநில  முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு செல்போனில் பேசி, சம்பவம் குறித்து முழு விவரங்களைக் கேட்டறிந்த அவர் ஏற்கெனவே அந்த நபர்கள் துன்புறுத்தி உள்ளார்களா? என்று கேட்டார். பல சந்தர்ப்பங்களில் தன்னைத் துன்புறுத்தியதாக அந்த பெண் முதலமைச்சரிடம் கூறினார்.

அதற்கு முதலமைச்சர் இதுபோன்ற சம்பவம் பொறுத்துக்கொள்ள முடியாது
மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். சிரிஷாவின் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கேட்டரிந்து அந்த பெண்ணின் 3 குழந்தைகளின் படிப்பு செலவு அரசு ஏற்பதாகவும் மேலும் அரசு அவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவளிக்கும் என்றும்.அந்த பெண்ணுக்கு ஆறுதல்
கூறினார்.

கடன் மற்றும் நிதி நெருக்கடியால் அவதிப்படும் அந்த பெண் சிரிஷாவின் நிலைமையை அறிந்த முதலமைச்சர், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக செல்போனில் உறுதி அளித்தார். பெண்ணுக்கு நடத்த சம்பவம் குறித்தும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் சென்றடைந்தது என்று உறுதி படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
உத்தரவிட்டார்.

Tags :
Andhra PradeshChandrababu NaiduChittoorKuppam
Advertisement
Next Article