For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு!!

09:39 PM Nov 14, 2023 IST | Web Editor
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை  நவ 15  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு
Advertisement

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே நாளை (நவ. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 - 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement