நாளை தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை தவெக தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார். இது தொடர்பாக கட்சியின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
— TVK Party HQ (@TVKPartyHQ) June 14, 2025
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக 30.05.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 04.06.2025 அன்றும் மூன்றாம் கட்டமாக 13.06.2025 அன்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனையடுத்து, நான்காம் கட்டமாக நிறைவு விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (15.06.2025) நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.