For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழகம் முழுவதும் நாளை #TNPSC குரூப்-2 தேர்வு!

08:58 AM Sep 13, 2024 IST | Web Editor
தமிழகம் முழுவதும் நாளை  tnpsc குரூப் 2 தேர்வு
Advertisement

ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை (செப்.14 சனிக்கிழமை) நடைபெறுகிறது.

Advertisement

தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர்,ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏதேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது. முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு செப்.14-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 20-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி முடிவடைந்தது.

பட்டப்படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்தனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்களில் 7 லட்சத்து 93ஆயிரத்து 947 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ஆக.31-ம் தேதி ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு முதல்நிலைத்தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம்முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு செல்லுமாறுதேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுக்கூடத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement