Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TNFishermen | இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது!

09:23 PM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Advertisement

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.  அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: “This is the Face of the Indian Army ” – வெளியானது #Amaran திரைப்படத்தின் டிரெய்லர்!

கடந்த மாதத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளின் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

Tags :
ArrestFishermennews7 tamilRameswaramsri lanka navytamil naduTN fisherman
Advertisement
Next Article