Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
09:52 PM Jun 06, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இக்கோயிலில், ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : நடிகர் விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025 ஆம் ஆண்டு 01-07-2025 முதல் 07-07-2025 முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு 07.07.2025 அன்று காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும் விவரத்தை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்கு அறியும் வகையில் தங்கள் நாளிதழில்/தொலைக்காட்சியில் சேயை செய்தியாக வெளியிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
muruganmurugan templenews7 tamilTempleThiruchendur
Advertisement
Next Article