For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

14 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு எச்சரிக்கை!

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
05:16 PM Aug 23, 2025 IST | Web Editor
14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களுக்கு  இடி மின்னலுடன் கூடிய  மழைக்கு  எச்சரிக்கை
Advertisement

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், மற்றும் விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை தொடர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் மழை காரணமாக, வறண்ட நிலங்கள் குளிர்ச்சியடைந்து, விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மழை நீடிக்கும்பட்சத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வானிலை நிலவரங்களை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
Advertisement