For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

05:06 PM Nov 26, 2023 IST | Web Editor
அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் 28-ம் தேதிக்கு முன்பாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் டிசம்பர் 1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றுஅடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு சேலம், நாமக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement