For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கண்ணூரில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு; 2 மாவோயிஸ்ட்டுகள் காயம்!

01:29 PM Nov 13, 2023 IST | Web Editor
கண்ணூரில் தண்டர்போல்ட் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு  2 மாவோயிஸ்ட்டுகள் காயம்
Advertisement

கண்ணூர் அய்யன்குன் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  

Advertisement

வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தண்டர்போல்ட் குழுவை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், தண்டர்போல்ட் படையினரும் திருப்பி சுட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தில் இருந்து கடும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பத்து நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலும் போலீசார் சென்றனர்.

வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சோதனையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து, மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.அந்த இடத்தில், மாவோயிஸ்டுகளின் முகாம் இயங்கி இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் சில தப்பிச்சென்ற மாவோயிஸ்டுகள் காயமடைந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement