For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
05:50 PM Mar 20, 2025 IST | Web Editor
மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்   தமிழ்நாடு அரசு உத்தரவு
Advertisement

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ்குமாரின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அதிகாரியின் ஆணைப்படி தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது,

Advertisement

பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரம்:

1. சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

3 . காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement