For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆட்சி மாற்றம் - ஒடிசா முதல்வர் அலுவலகத்தின் மூன்று ஆலோசகர்கள் ராஜினாமா!

09:02 PM Jun 06, 2024 IST | Web Editor
ஆட்சி மாற்றம்   ஒடிசா முதல்வர் அலுவலகத்தின் மூன்று ஆலோசகர்கள் ராஜினாமா
Advertisement

ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் சிறப்பு திட்ட ஆலோசகர், தலைமை ஆலோசகர், தலைமைச் செயலர் ஆகிய மூவரும் ராஜினாமா செய்துள்ளனர். 

Advertisement

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. 147 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸை எதிர்த்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் போட்டியிட்டது. இந்த தேர்தல் முடிவுகளில் பாஜக 78 தொகுதிகளை வென்று, நவீட் பட்நாயக்கிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

கடந்த 2000-த்தில் இருந்து தொடர்ந்து ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக், ஆறாவது முறையாக பதவியேற்பார் என எதிர்பார்த்த நிலையில் அந்த கனவு தவிடுபொடியானது. இந்நிலையில் ஒடிசா சிறப்பு திட்ட ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணனை நவீன் பட்நாயக் அரசியல் பதவியில் நியமித்திருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும்  ராஜினாமா செய்துள்ளனர். பாலகிருஷ்ணன், சுரேஷ் மஹாபத்ரா மற்றும் உபேந்திர திரிபாதி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருந்தபோது, ​​இந்த அதிகாரிகள் அவருக்கு சிறப்பு ஆலோசகர்களாக பணியாற்றினர்.

Tags :
Advertisement