Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிரட்டும் மிக்ஜாம் புயல் - ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

12:25 PM Dec 04, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு பத்து  கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலின் காரணமாக ஆந்திராவில்  மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.5) விடுமுறை ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.

Tags :
Andhra PradeshcollegesCycloneholidayMichaungSchools
Advertisement
Next Article