For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது" - அப்பாவு விமர்சனம்!

எட்டாவது தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
02:05 PM Jun 10, 2025 IST | Web Editor
எட்டாவது தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
 தமிழை அழிக்க நினைப்பவர்கள் வாயில் தமிழ் வராது    அப்பாவு விமர்சனம்
Advertisement

திருநெல்வேலியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"பொதுமக்கள் காத்திருக்கும் இடங்களில் பொது நூலகங்கள் அமைக்க 300 கோடி ஒதுக்கப்பட்டதன் அடிப்படையில் திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. தமிழ்நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதைக் கொண்டு சித்தரிக்கிறீர்கள் அது தவறானது.

கட்டணமில்லா பேருந்து மூலம் பல ஆயிரம் ரூபாய்களை பெண்கள் சேமிக்க முடிகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எந்த இடங்களிலும் பெண்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, பிரச்சனைகளும் இல்லை. சில இடங்களில் சில தவறு செய்கின்றவர்கள் திட்டமிட்டு ஏதேனும் தவறு செய்தால் இந்த அரசு வேடிக்கை பார்க்காது சரியான நடவடிக்கை எடுக்கும்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தண்டனை வாங்கி கொடுத்தது போல் தண்டனை வாங்கி கொடுக்கும். சட்டத்தின் ஆட்சியோடு, பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய ஆளுநர் பதவியை வேண்டாம் என்று ஆளுநர் விட்டு செல்வாரா. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசட்டும்.

எல்லோரும் அம்பேத்கர் உருவாக்கிய சட்டப்படி தான் அனைவரும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் ஆர்.எஸ்.எஸ் அல்லாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அவர்களின் எண்ணங்களும், சிந்தனைகளும் சமஸ்கிருதம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அது தமிழ்நாட்டில் நடக்காது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இருந்து தான் மோசமான போதை வஸ்துகளை தயாரித்து தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறார்கள்.

தமிழ்நாடு அரசு உரிமை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறது. தமிழ்நாட்டில் கூலிப்படைகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொலை நடப்பதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். ஏழு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்.

தனக்கு தமிழ் பேச முடியவில்லை என்று வருத்தத்துடன் அமித்ஷா பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், தமிழை அழிக்க நினைக்கும் அமித்ஷாவின் வாயில் தமிழ் வராது என்று தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காக நடைபெறாத ஊழலை நடைபெற்றதாக அமித்ஷா குறிப்பிடுவதாக" தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement