For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

03:06 PM Jul 02, 2024 IST | Web Editor
அரசு கலை  அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
Advertisement

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கியது.  மேலும்,  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்,  கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்தது.

இதையடுத்து, கல்லூரியில் சேர விரும்புவோர் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

கடந்தாண்டு போலவே,  மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்த பின்னர்,  ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது.  இதனைத் தாெடர்ந்து கடந்த மே 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை,  பாதுகாப்புபடை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும்,  2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதற்கு முன் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 8 ஆம் தேதி முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை கல்லூரி முதல்வர்கள் நடத்திட வேண்டும். ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63% மாணவர் சேர்க்கை நடை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement