Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இதனால்தான் டி20 இறுதிப் போட்டியை.. நான் பார்க்கவில்லை.." - அமிதாப் பச்சன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

06:41 PM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

"இதனால்தான் டி20 இறுதிப் போட்டியை.. நான் பார்க்கவில்லை.."  என  அமிதாப் பச்சன் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

Advertisement

20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.

தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் 177ரன்கள் இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகான இந்தியாவின் இந்த வெற்றியால் நாடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வை ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைத் தொடர்ந்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இது தான் காரணம் என மிக சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளதாவது..

” நான் இறுதிப் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. இந்திய அணியின் வென்றதை அறிந்து கண்ணீர் வடித்தேன். தொலைக்காட்சியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டத்தை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிடும் என்கிற தோற்றம் ஒன்று உலவி வருகிறது. அதனால் நான் பார்க்கவில்லை” என தெரிவித்தார்.

அதேபோல நேற்று நடந்த உலக்கோப்பை இறுதி ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என அமிதாப் பச்சனிடம் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்று அவரும் இறுதி ஆட்டத்தை பார்க்கவில்லை என்பது சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Tags :
Amithab BachchanICC t20 world cupind vs saIND vs SA 2024IND vs SA FinalT20 World Cup 2024
Advertisement
Next Article