Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... "பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்" - கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!

பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
05:50 PM May 30, 2025 IST | Web Editor
பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement

10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று (மே.29) நடைபெற்றது. இதில், பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றிபெறும் அணி குவாலிஃபையர் போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியுடம் மோதும். இதில் வெற்றிபெறும் அணி ஜுன் 3ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது.  இந்த நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தீவிர பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் விடுமுறை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags :
BengaluruCricketIPLIPL 2025news7 tamilNews7 Tamil UpdatesRCBRCB FanSiddaramaiahSports
Advertisement
Next Article