Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ThirupatiLaddu விவகாரம் | ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார்!

01:45 PM Sep 22, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி கோயில் லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் கருணாசாகர் சைதாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, "கலப்பட நெய் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி கோயிலின் புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், இந்துக்களின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Andhra PradeshChandababu NaiduGheeJegan Mohan ReddyPoliceTirupathi Laddu
Advertisement
Next Article