For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்" - குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
09:51 AM Jun 03, 2025 IST | Web Editor
குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
 என்னை சித்ரவதை செய்கிறார்கள்   சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்    குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை
Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குவைத்திற்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றார். தற்போது வேலை பார்த்து வரும் இடத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தன்னை சித்ரவதை செய்வதாகவும் அந்த இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னை அங்கிருந்து மீட்குமாறு நீயூஸ்7 தமிழ் வாயிலாக வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

"என் பெயர் அப்துல் ரகுமான். நான் குவைத்திற்கு ஓட்டுநர் வேலைக்காக வந்தேன். நான் வேறு இடத்திற்கு விசா எடுத்தேன். ஆனால், என் பான்சர் என்னை வேறு இடத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்து விட்டார். நான் தற்போது வேலை செய்து வரும் வீட்டில் சரியான சாப்பாடு, ரூம் வசதி இல்லை. அதிகமாக வேலை வாங்குகிறார்கள். எதாவது எதிர்த்து கேட்டால் என்னை அடிக்க வருகிறார்கள். ஓவரா பேசுகிறார்கள். நான் ஊருக்கு கிளம்புகிறேன் எனக்கூறினார், ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோவை காண

என்னை அறையில் வைத்து டார்ச்சர் செய்கிறார்கள். என்னுடைய பாஸ்போர்ட், சிவில் ஐடியை பிடிங்கி வைத்துக்கொண்டு குவைத்தை விட்டு உயிரோடு போக முடியாது என மிரட்டுகிறார்கள். நான் இதுகுறித்து இந்தியன் எம்பஸியில் புகார் அளித்ததற்கு என் மேல் புகார் வந்ததாகவும், நான் சிறைக்கு செல்ல போவதாகவும் பயமுறுத்துகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன். நான் ஏன் தவறு சிறைக்கு செல்ல வேண்டும். என்னுடைய பாஸ்போர்ட், சிவில் ஐடியை பிடிங்கி வைத்துக்கொண்டு வெளியில் அடித்து துரத்தினால் நான் எங்கு செல்ல முடியும்.

சிறைக்கு சென்றால் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நான் சிறைக்கு செல்லக்கூடாது. நான் பத்திரமாக ஊருக்கு செல்ல வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவை போடுகிறேன். இதனை அதிகமாக பகிர்ந்து என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றுங்கள்" என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
Advertisement