Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“என் சொந்த விஷயம்.. எனது விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை..” - தெலங்கானா அமைச்சர் கருத்துக்கு நடிகை #Samantha பதில்!

09:11 AM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

நாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

Advertisement

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். தெலங்கானவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கொண்டா சுரேகா இது தொடர்பாக பேசியதாவது,

“கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். கேடிஆர் பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதில் அரசியல் சதி எதுவும் இல்லை என நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : Lebanon | ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – #Isreal அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

“திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும். உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்" இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.

Tags :
KondaSurekhaKTRNagaChaitanyaNews7Tamilnews7TamilUpdatessamanthaTelanganaminister
Advertisement
Next Article