For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை" -  சென்னை காவல் ஆணையர் தரப்பு பதில் மனு!

03:04 PM Jun 08, 2024 IST | Web Editor
 சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை     சென்னை காவல் ஆணையர் தரப்பு பதில் மனு
Advertisement

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு,  ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து கஞ்சா வழக்குக்காக மே. 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்,  மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனிடையே,  சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் கமலம் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.  இதனையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதியான ஜெயச்சந்திரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  முன்னதாக இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.  அப்போது  நீதிபதி பாலாஜி,  என்ன காரணத்திற்காக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது.  அதனால் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில்,  "சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

ஆவணங்கள்,  ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு,  சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement