“கூட்டணி ஆட்சி கிடையாது” - அதிமுக திட்டவட்டம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி,
“அதிமுகவை எதிர்க்க திமுகவிற்கு தைரியமும், துணிச்சலும் கிடையாது. அதிமுகவிற்கு கண்னுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு அவர் இருக்க மாட்டார். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி என்னை சிறையிலடைக்க முயற்சி செய்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. நான் யாரையும் ஏமாற்றி மோசடி செய்யவில்லை.
கூட்டணி ஆட்சி என யார் சொன்னது?. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி நடக்கும். பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறாது. பிரபாகரனுக்கு நிகரான வீரத்தைக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். அதை மொத்தமாக வெல்ல தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என தெரிவித்தார்.