“மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி மறுப்பு” - அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கும்பகோணம் அருகே சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் செய்தியாளை சந்தித்தார்.
அப்போது அவரிடம் கும்பகோணம் பாணாதுறை ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவிலில் விதிகளை மீறி ஆகம்படிக்காத வர் அபிஷேகம் செய்ததை சுட்டிகாட்டி செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது பற்றி எனக்கு தெரியாது விசாரணை செய்து அறிக்கை இன்று அல்லது நாளை தாக்கல் செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் இதுவரை மூவாயிரம் கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுக்குள் மேலும் ஆயிரம் கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வைப்பு நிதியை அதிகப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கொண்டு பூஜை செய்யும் அர்ச்சகர் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 29 ஆயிரம் திருக்கோயில்களுக்கு மின்விளக்கு கட்டணங்களை அரசு கட்டுகிறது.
மத்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சீரமைக்க அனுமதி தர மறுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் காலதாமதம் படுத்துகிறது. இதனால் திருச்சி அருகே திருவரம்பூரில் உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர முடியாமல் உள்ளது”
இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.