Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் என்பது வதந்தி - நியூஸ்7 தமிழுக்கு செல்வப்பெருந்தகை பிரத்யேக பேட்டி!

03:35 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டில் சிக்கல் என்பது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர்களுடன் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது:

"திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டில் சிக்கல் என்பது முற்றிலும் வதந்தி. திமுகவுடன் தொகுதி உடன்படிக்கை மிக விரைவில் கையெழுத்தாகும். காங்கிரஸ் மேலிட தலைமையுடன் இரண்டாவது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணி அளவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை சந்தித்து தொகுதிகள் உறுதி செய்யப்பட இருக்கின்றன." என தெரிவித்தார்.

Tags :
ALLIANCECongressDMKElection2024loksabha election 2024News7Tamilnews7TamilUpdatesseat sharingSelvaperuthagaiTN Govt
Advertisement
Next Article