For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேனி மஞ்சளார் அணை 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

10:06 AM Jun 06, 2024 IST | Web Editor
தேனி மஞ்சளார் அணை 53 அடியை எட்டியதால் 2 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் முழு உயரமான 57 அடியில் தற்போது 53 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள மஞ்சளார் அணை தற்போது தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக மஞ்சளார் அணையின் 395.37 மில்லியன் கன அடி நீர் நிரம்பி அதன் முழு உயரமான 57 அடியில் தற்போது 53 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் அணைக்கு வினாடிக்கு 99 கன அடி நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் அணையின் நீர்மட்டம் 55 அடி எட்டும் பொழுது அணை நிரம்பியதாக கணக்கிட்டு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement